Nallavan-
எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
Saturday, May 11, 2013
Sunday, April 21, 2013
காகிதங்கள் கொண்ட கோபம் ..!
காகிதங்களும்
பேனாவும்
என் மீது கோபம் கொண்டன ..!
கவிதையை
வடம் பிடித்து வர ,
அவற்றை மறந்து
நான் கணினியில்
பயணம் செய்வதால் ..!
என் கணினி மீது அவை
பொறாமை கொள்கிறது ..
தாய் மருமகள் மீது
கொண்ட பொறாமை போல,
நேற்று வந்த நீ
என் இடத்தை நிரப்பி விட்டாயென ..
எல்லா கணவன்களைப் போல்
நானும் இந்த பொறாமையை இரசிக்கிறேன் ..!
Sunday, April 14, 2013
Thursday, April 11, 2013
Saturday, March 9, 2013
இருளோடு பயமேன் ?
கருவறையில்
இருளோடு இருந்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?
கண்மூடி
இருளோடு கலக்கும் போது
மனதோடு உணர்ந்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?
இரவில்
உறங்கையில்
வெளிச்சம் வெறுத்தோம்
இருளை அனைத்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?
கனவு வந்து
அங்கே தன்படம் காட்டும் ..
காதலர்களுக்கு
தனிமையுடன் சேர்ந்து
புது இனிமை கூட்டும் ..
மனைவியின் தலையணை
மந்திரத்திற்கு
தனி ராகம் சேர்க்கும் ..
இருந்தும்
இருளோடு பயமேன் ?
வெளிச்சம்
பூட்டிவைக்கும் ..
புறக்காட்சி
மறைத்துவைக்கும் ..
அகக்காட்சி
திறந்துவைக்கும் ..
இருந்தும்
இருளோடு பயமேன் ?
Thursday, February 21, 2013
இல்லை , இல்லாமல் இல்லை ..!
இல்லை , இல்லாமல் இல்லை ..!
காட்சிகளை மறைப்பது
கண்களுக்கு கோபமில்லை ..
உயிரை
தாங்கிகொள்வது
உடலுக்கு பளுவில்லை ..
காற்று
வந்து செல்வது
இதயத்திடம் சொல்வதில்லை ..
சில நினைவுகள்
சுமப்பதால்
மனதிற்கு பாரமில்லை ..
வார்த்தைகள்
நாவின் நுனி வரை நின்றும்
சில நேரம் பேச்சு வருவதில்லை ..
கண்கள் காயப்பட்டும்
சில நேரம் கண்ணீர்சிந்துவதில்லை ..
மனம் காயப்பட்டும்
மனதின் கண்ணீர்
பிறர்க்கு தெரிவதில்லை ..
பல நேரம்
புன்னகையில்
மகிழ்ச்சி இருப்பதில்லை ...
கிட்ட இருந்தும்
கிட்டியதை
எட்ட முடிவதில்லை ..
பல நேரம்
பேசும் வார்த்தைகள்
மனதில் விழுகிறது
செவியில் விழுவதில்லை ..
பல காட்சிகள்
இதயத்தை அறைகிறது
கருவிழியில் விழுவதில்லை ..
புரிதலில் இருந்தும்
மூளை சிலநேரம்
சிந்திப்பதில்லை ..
சில உறவுகள்
இருந்தும் அதில்
உயிர் இருப்பதில்லை ..
என்றும்
காகிதப்பூக்களில்
வாசம் இருப்பதில்லை ..
உடலில் ஊனம்
ஊனமில்லை ...
மனதின் ஊனம்
எளிதில் போவதில்லை ..
இங்கே ,
இல்லை
இல்லாமல்
ஏதுமில்லை ...
Sunday, February 17, 2013
மழை....!
காற்றின்
துணைகொண்டு
கால பருவத்தின்
வழியே
மேகத்திடம் இருந்து
தப்பித்து வருகிறது
மழைத்துளி ..
வந்த
மழைத்துளி
பிடித்ததால்
தன்னில்
ஒளித்து வைத்துவிடுகிறது
பூமி ..
மழைத்துளிக்கு
பிடித்திருந்ததால்
தங்கிவிடுகிறது
புல்வெளியில் ..
தன்னிடமிருந்து
தப்பித்துவந்த
வந்த மழைத்துளியை
சூரியன் துணைகொண்டு
மீண்டும்
சிறைபிடித்து செல்கிறது ..
மேகம் ..
Subscribe to:
Posts (Atom)





